தாம் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்த குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றவியல் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள சுவிஸ் தூதரக ஊழியர் கனியா பன்னிஸ்டர் பிரான்சிஸ் இன்று எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனைகளை தாக்கல் செய்துள்ளார்.
இலங்கை அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக பொய்யான தகவல்களை வழங்கியதாகவும், தனது கடத்தல் கோரிக்கையில் பொய்யான ஆதாரங்களை உருவாக்கியதாகவும் கனியா பன்னிஸ்டர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி அல்லது அதற்கண்மைய நாட்களில் கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில் வைத்து வெள்ளை வாகனத்தில் வந்த ஐவர் அவரை கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் மிரட்டி, தடுத்து வைத்தனர், நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா குறித்து பல மணி நேரம் விசாரணை நடத்தினார்கள் என கனியா பன்னிஸ்டர் தெரிவித்த தகவலிற்கு பொய்யான சாட்சியங்களை இட்டுக்கட்டியதாக அவர் மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, குற்றவியல் சட்டத்தின் 189 மற்றும் 190 பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை பேணுவதை சவால் செய்யும் வகையில் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்தார்.
இந்த வழக்கை ஜனவரி 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்ல தீர்மானித்தார்.
அடுத்த விசாரணைத் திகதியில் எழுத்து வடிவில் பதில் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டது.



