பயணிகளுக்கு அதிகபட்ச வினைத்திறனான சேவையை வழங்கும் வகையில் புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றுவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் இழக்கப்படாமலும் அல்லது வெட்டப்படாமலும் இருக்கும் வகையில் பணிகளைச் செய்வதே நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.
புகையிரத திணைக்களத்தை திறமையான அமைப்பாக மாற்றுவதற்கு, அதனை ஓர் அதிகார சபையாக மாற்ற வேண்டும் என கடந்த காலங்களில் அரசாங்கத்திடம் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.



