வர்த்தக நிலையத்தில் தீ: ஒருவர் பலி!

Date:

மிரிஹான, புறக்கோட்டை சந்தியில் உள்ள கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 63 வயதுடைய கடையின் தொழிலாளி என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபருக்கு கடையின் உரிமையாளர் கடையிலேயே தங்குமிட வசதி செய்து கொடுத்துள்ளார்.

தீயினால் கடை முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. கடைக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பும் கண்டறியப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை நுகேகொட பொலிஸ் பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வரும் நிலையில், நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

மக்கா வெறுப்பை விதைக்கும் இடமல்ல; சவூதியில் இடம்பெற்ற விடயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது!

புனித மக்கா என்பது வெறுப்பையும் பிரிவினையையும் வளர்க்கும் இடமல்ல; மாறாக மன்னிப்பு,...

உள்ளூர் துப்பாக்கியுடன் விவசாயி கைது!

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த...

சமையலறைக்குள் தீப்பற்றிய எரிவாயு சிலிண்டர்

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பகுதியில் வீ ஒன்றில் எரிவாயு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்