27.6 C
Jaffna
March 29, 2024
மலையகம்

கிணற்றில் பெண்ணின் சடலம்!

ஹைபொரஸ்ட் -பிரேம்லி தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த பத்து நாட்களாக வீட்டில் இருந்து காணாமற் போயிருந்த 56 வயதுடைய கருப்பையா சரோஜா என்பவரே, நேற்று (25) மாலை சடலமாக மீட்கப்பட்டதாக ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் காணாமல் போன விடயம் தொடர்பில், ஹைபொரஸ்ட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பெண்ணின் வீட்டுக்கு அருகிலிருக்கும் விவசாய காணியில் அமைக்கப்பட்டுள்ள ஆழமான கினற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வலப்பனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.மோகனராஜன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, மரண விசாரணையை மேற்கொண்டதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உயிரிழந்தவரின் நுரையீரலில் பல்

Pagetamil

சாரதி இலேசாக தூங்கி விட்டாராம்!

Pagetamil

சட்டவிரோத மின்கம்பி வேலியில் சிக்கி ஒருவர் பலி

Pagetamil

விபரீதத்தில் முடிந்த காதல்: 44 வயது ஆசிரியைக்கு கத்தியால் குத்திய 45 வயது ஆசிரியை!

Pagetamil

விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

Leave a Comment