சிறிரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நோர்வேயில் வசிக்கும் புங்குடுதீவு வாசியொருவருக்கு சொந்தமான கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றை மோசடியான ஆவணங்கள் மூலம் கைப்பற்றியதாக பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே அவர் கைதாகியுள்ளார்.
வீட்டு உரிமையாளர் திடீரென உயிரிழந்ததை தொடர்ந்து, வாடகைக்கு பெறப்பட்ட வீட்டை மோசடி ஆவணங்கள் மூலம் கையகப்படுத்தப்பட்டதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளையடுத்து கல்கிசை பொலிசாரால் ப.உதயராசா கடந்த 12ஆம் திகதி கைது செய்யப்பட்டார். வரும் 26ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




