தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான அர்ப்பணிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் அளவிடக்கூடிய முன்னேற்றம் எதுவும் ஏற்படாதது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான OHCHR இன் அறிக்கையின் ஊடாடும் உரையாடலில் பேசிய இந்திய பிரதிநிதிகள், “இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான அவர்களின் உறுதிப்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தில் அளவிடக்கூடிய முன்னேற்றம் இல்லாதது கவலையுடன் குறிப்பிடப்பட வேண்டியது”. என தெரிவித்துள்ளனர்.
இந்திய தரப்பின் கருத்தில்,
இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த தனது நிலையான பார்வை, ஐக்கிய இலங்கையின் கட்டமைப்பிற்குள் அரசியல் தீர்வை ஏற்படுத்தி, அங்கு வாழும் தமிழர்களுக்கு நீதி, சமாதானம், சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதாகும்.
இலங்கையின் தற்போதைய நெருக்கடியானது கடனால் உந்தப்பட்ட பொருளாதாரத்தின் வரம்புகளையும் அது வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் நிரூபித்துள்ளது.
இலங்கையின் பிரஜைகளின் ஆற்றலைக் கட்டியெழுப்புவதும், அவர்களின் அதிகாரமளிக்கும் நோக்கில் செயற்படுவதும் இலங்கையின் சிறந்த நலன்களாகும் என்றும், இதற்கு அடிமட்ட மட்டத்திற்கு அதிகாரப் பகிர்வு ஒரு முன்நிபந்தனையாகும் என்றும் இந்தியா மேலும் தெரிவித்துள்ளது.
ஏழு தசாப்தங்களில் ஏற்பட்டுள்ள மோசமான நிதி நெருக்கடியில் இருந்து எழுந்துள்ள மனிதாபிமான சவால்களைச் சமாளிக்க இலங்கை மனித உரிமைகளை மேம்படுத்தவும் நிறுவனங்களை வலுப்படுத்தவும் வேண்டும் என்று UNHRC உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உணவு, எரிபொருள், மின்சாரம் மற்றும் மருந்துப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கு உதவ முயற்சிக்கும் இலங்கைக்கு ஐநா உறுப்பு நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் ஆதரவளிக்க வேண்டும் என ஐநாவின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நடா அல் நஷிப் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கையின் புதிய அரசாங்கம், ஜூலை மாதம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்த போராட்டத் தலைவர்களை கைது செய்ய பாதுகாப்புச் சட்டங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
India's statement at the Interactive Dialogue on the report of OHCHR on promoting reconciliation, accountability, and human rights in Sri Lanka at the 51st session of the Human Rights Council. @MEAIndia @SecySanjay @IndiainSL pic.twitter.com/hFt80EB8GM
— India at UN, Geneva (@IndiaUNGeneva) September 12, 2022



