வரிசையில் நின்ற13 மோட்டார் சைக்கிள்களை மோதிய கார்!

Date:

கற்பிட்டி – ஏத்தாளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் நின்ற மோட்டார் சைக்கிள்கள் மீது சொகுசு கார் ஒன்று மோதியதில் 13 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.

எனினும் இந்த விபத்தில் உயிர்ச் சேதங்களோ அல்லது எவருக்கும் காயங்களோ ஏற்படவில்லை எனவும் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பாலாவி பகுதியிலிருந்து கற்பிட்டியை நோக்கிப் பயணம் செய்த சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்தமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரின் முன் பக்கம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் கற்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்துக்கு காரணமான சொகுசு சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி பொலிஸார் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

திருக்கோவில் 7கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரிக்கு 14 நாள் விளக்கமறியல்

திருக்கோவில்  பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன்...

இலங்கை எல் நினோ காலநிலைக்குள் நுழைந்தது

இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ்...

TEEN விபத்துகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் கவலை

பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்