Pagetamil
விளையாட்டு

திருமலையில் நான்கு முன்னணிப் பாடசாலைகளுக்கு இடையில் கிரிக்கெட் சமர்

திருகோணமலையில் பிரபல முன்னணிப் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் சமர் மீண்டும் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த போட்டியின் ஆரம்பநிகழ்வு இன்று (21) திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் அவர்களின் தலைமையில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைைக்கப்பட்டது.

50 ஓவர்களைக் கொண்ட இச்சுற்றுப்போட்டியானது திிருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் பழைய மானவனும், கோணேஸ்வரா இந்துக்கல்லூரி கிரிக்கெட் குழுவின் முன்னைநாள் தலைவருமான மறைந்த பிரபாகரன் திலக்‌ஷன் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது நண்பர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்ட்டு வருகிறது.

இச்சுற்றுப் போட்டியின் முதல்போட்டியான இன்று (21) நாணயசுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பாட களமிறங்கும் தி/இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியை எதிர்த்து உவர்மலை விவேகானந்தா கல்லூரி அணியினர் களத்தடுப்பில் ஈடுபட தற்போது போட்டி ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய போட்டிகளாக எதிர்வரும் வியாழக்கிழமை திருகோணமலையின் பிரபல பாடசாலைகலான திருகோணமலை விபுலானந்தா கல்லூரி மற்றும் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி ஆகியன போட்டியிடவுள்ளதுடன் இப் போட்டியின் இறுதி சுற்று போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரவ்பீக் பாயிஸ்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

Leave a Comment