சீனாவில் மீன், நண்டுகளிற்கும் கொரோனா பரிசோதனை!

Date:

சீனாவில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது மீன், நண்டு போன்ற விலங்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா தொற்று பரவலின் பிறப்பிடமாக அறியப்படுகிறது சீன தேசம். அங்குள்ள வூஹான் மாகாணத்தில்தான் உலகிலேயே முதல் முறையாக இந்த தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்து இப்போது உலகின் ஏழு கண்டங்களுக்கும் கொரோனா பரவியது.

இந்நிலையில், சீனாவின் சியாமென் நகர் உட்பட பெரும்பாலான பகுதிகளை சேர்ந்த சுமார் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சோதனை வெறும் மனிதர்களோடு நின்று விடாமல் கடல்வாழ் உயிரினங்களிடமும் அதிகாரிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குச் சான்றாக சீன ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள வீடியோ கவனம் பெற்றுள்ளது.

அதில், சுகாதாரத் துறை ஊழியர்கள் மீன் மற்றும் நண்டு போன்ற கடல் வாழ் உயிரினங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஊழியர்கள் பாதுகாப்பு கவச உடையும் (PPE கிட்) அணிந்துள்ளனர். மீனின் வாய் பகுதி மற்றும் நண்டின் ஓட்டிலும் PCR பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...

அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம்....

திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்