அமெரிக்காவின், புளோரிடாவில் தனது நாயுடன் உடலுறவு கொண்டதற்காக இளம பெண்ணொருவர் கடந்த செவ்வாயன்று கைது செய்யப்பட்டார். அவர் நாயுடன் உறவு கொள்வதை வீடியோ படம் பிடித்து, பத்திரமாக சேமித்து வைத்திருந்த அவரது முன்னாள் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
36 வயதான கிறிஸ்டினா காலெல்லோ என்ற பெண்ணே நாயுடன் உறவு கொண்ட குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார். அவர் கிட்டத்தட்ட எட்டு வருடங்களில் பலமுறை ‘நாயுடன் விருப்பத்துடன் உடலுறவில் ஈடுபட்டார்’ என்று பினெல்லாஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம் பகிர்ந்துள்ள கைது அறிக்கை தெரிவிக்கிறது.
முன்னாள் காதலனான ஜெஃப்ரி ஸ்பிரிங்கர் (39) சில காலம் கிறிஸ்டினாவுடன் பழகினார். இந்தக்காலப்பகுதியில் கிறிஸ்டினாவின் பாலியல் செயற்பாட்டை வீடியோ பதிவு செய்து, அதை ஒரு ஃபிளாஷ் டிரைவில் பாதுகாத்து வந்தார்.
அந்த தம்பதி தற்போது பிரிந்து வாழ்கிறார்கள்.
கிறிஸ்டினாவிடமிருந்து நாய் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கமான பரிசோதனைக்காக உள்ளூர் செல்லப்பிராணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன் இனம் வெளியிடப்படவில்லை, இருப்பினும் இது வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
கிறிஸ்டினாவும், ஜெஃப்ரி ஸ்பிரிங்கர் காவலில் வைக்கப்பட்டனர். அவர்கள் மீது விலங்குகள் சம்பந்தப்பட்ட பாலியல் நடவடிக்கை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புளோரிடா Safety Harbor பகுதியில் வசிக்கும் கிறிஸ்டினா காலெல்லோ, எட்டு ஆண்டுகளாக தனது நாயுடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டதற்காக செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார். அவர் Pinellas கவுண்டி சிறையில் இருந்து விடுவிக்க 5,000 பிணைப் பத்திரத்தை பதிவு செய்தார்
கிறிஸ்டினாவின் முன்னாள் காதலரான ஜெஃப்ரி ஸ்பிரிங்கர் கிறிஸ்டினாவுடனான உறவுக் காட்சிகளையும், கிறிஸ்டினாவின் நாயுடனான உறவுக் காட்சிகளையும் படம்பிடித்திருந்தார்.. அவர் பினெல்லாஸ் கவுண்டி சிறையில் இருந்து சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டார்
கிறிஸ்டினா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனையும் 1,000 மொலர் அபராதமும் செலுத்த வேண்டும்.