இந்தியா

நடிகை சித்ராவுடன் தொடர்பிலிருந்த 2 அமைச்சர்கள் யார்?: நீதிமன்றத்தில் வெடித்த சர்ச்சை!

சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி அவரின் கணவர் ஹேம்நாத் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ராவின் பெற்றோர் ஹேம்நாத்துக்கு எதிராக கூறிய ஆதாரங்களும், ஹேம்நாத் உரிய ஆதாரமின்றி வைத்த குற்றசாட்டுகளாளும் அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சின்னத்திரை நடிகை விஜே சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி சென்னை அருகேயுள்ள நசரத்பேட்டை சொகுசு விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

கைதான ஹேம்நாத் 60 நாட்கள் சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என இடையீட்டு மனுவை சித்ராவின் தந்தை காமராஜ் சார்பில் தாக்கல் செய்திருந்தார்.

அவரது வாதத்தில், மகள் சித்ராவின் முகத்தில் காயங்கள் காணப்பட்டதால், ஹேம்நாத்தை சந்தேகிப்பதாகவும், நாடகத்தில் சக நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க கூடாது என சித்ரவதை செய்த ஹேம்நாத்தால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தனது மகள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சித்ரா வீட்டில் இல்லாத நேரத்தில் தனது பெண் தோழிகளை வீட்டிற்கு ஹேம்நாத் அழைத்து வந்துள்ளதாகதாகவும், இருவரும் ஒன்றாக இருக்கும் போதுதான் தனது மகள் தற்கொலை செய்துள்ளதாகவும் காமராஜ் தெரிவித்தியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஹேம்நாத் தரப்பில், சித்ரா குடும்பத்தில் அவர் மட்டுமே வருமானம் ஈட்டுபவராக இருந்தார் என்றும், குடும்ப செலவுக்காக சித்ராவை மட்டுமே நம்பியிருந்ததை சித்ராவின் தாய் பலமுறை கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தங்களுக்குள் எவ்வித பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்றும், வரதட்சணை எதுவும் கேட்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. சித்ராவை தாக்கியதாக கூறுவது தவறு என்றும், அவரது தற்கொலை தான் செய்து கொண்டார் என தெரிவிக்கபட்டது.

மேலும், சித்ராவின் மரணத்தில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் என்னவென்று எனக்கு முழுமையாக தெரியவில்லை என்றும் ஹேம்நாத் தரப்பில் வாதிட்டபோது, நீதிபதி குறுக்கிட்டு, எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அவர்களுக்கு தொடர்பு இல்லையென்றால் இந்த விவகாரத்தில் ஏன் என்னை இந்த அளவுக்கு சிக்க வைக்க வேண்டும் என்றும், சித்ராவின் கணவர் என்பதாலேயே கொலை குற்றச்சாட்டு சுமத்தக்கூடாது என்றும், தற்கொலை செய்து கொண்ட இடத்தில் என்ன நடந்தது என்று கூட தெரியாது என ஹேம்நாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கில் ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளதாக இந்த நீதிமன்றம் கருதுவதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விசாரணை நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என ஹேம்நாத்க்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

கூகிள் மேப் பார்த்து கார் ஓட்டிய பெண்: தூங்கிக் கொண்டிருந்த 7 பேரின் மேலாக ஏற்றினார்!

Pagetamil

ஹொட்டல் அறையில் 2 காதலர்களுடன் உல்லாசமாக இருந்த மனைவி: திடீரென நுழைந்த கணவனால் களேபரம்!

Pagetamil

“எனது மகள் ஷர்மிளாவை ஆதரியுங்கள்” – ஜெகன்மோகன் ரெட்டி தாயார் வேண்டுகோள்

Pagetamil

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

Pagetamil

சவுக்கு சங்கருக்கு உடந்தையாக இருந்த யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது

Pagetamil

Leave a Comment