லிட்ரோ எரிவாயு விலையும் குறைகிறது!

Date:

எதிர்வரும் 5ஆம் திகதி எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லிட்ரோ தலைவர், உலக சந்தையில் எரிவாயு விலை குறைந்துள்ளதாகவும், எனவே இந்த சலுகை நுகர்வோருக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

எரிவாயு விலை ரூ.50க்கு மேல் குறையும் என்று அவர் கணித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக நிதியமைச்சினால் எரிவாயுவுக்கான விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சூத்திரத்தின் பிரகாரம் இந்த வாரம் எரிவாயு விலை குறைக்கப்படும் எனவும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலகச் சந்தையில் எரிவாயுவின் விலை குறைவதால் ஏற்படும் நன்மைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதே விலை சூத்திரத்தின் சாதகமான அம்சமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் விலை ஏற்ற இறக்கங்களை கணிக்க முடியாது என கூறிய Litro தலைவர், ஆங்காங்கே எரிவாயு விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் என்னை கைது செய்ய தடைவிதியுங்கள்: நீதிமன்றத்தை நாடிய கோட்டா!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னை கைது...

அமெரிக்காவின் பி-52 குண்டுவீச்சு விமானம் விபத்து: 8 பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்!

கலிபோர்னியாவில் திங்களன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பி-52 ரக குண்டுவீச்சு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்