30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

இன்று 25% தனியார் பேருந்துகள் இயங்கும்

இன்று 25 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என தனியார் பேருந்து நடத்துநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் சில டிப்போக்களில் இருந்து குறைந்த அளவிலான எரிபொருளை பெற்றதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

பேருந்துகளை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர பேருந்து உரிமையாளர்கள் முயற்சி எடுப்பார்கள் என்று உறுதியளித்தார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ், தனியார் பஸ்களுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் போக்குவரத்துக்கான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கும், நடவடிக்கைகளை 50 வீதத்தால் அதிகரிப்பதற்கும் புதிய அரசாங்கம் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கு உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

Leave a Comment