தேசிய எரிபொருள் பாஸ்: அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்!

Date:

எரிசக்தி அமைச்சு, ICTA மற்றும் பல இலங்கை தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதரவுடன் இணைந்து நாட்டில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகத்தை நிர்வகிப்பதற்கும் வரிசைகளை எளிதாக்குவதற்கும் தேசிய எரிபொருள் பாஸ் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த முறையை சனிக்கிழமை (16) நேரலை செய்தியாளர் சந்திப்பில் மக்களுக்கு அறிமுகப்படுத்தியதுடன் மேலதிக விவரங்களையும் தெரிவித்தார்.

தேசிய எரிபொருள் பாஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்:

♦இணையதளம்: https://fuelpass.gov.lk/

♦அனைத்து வகையான தனியார் வாகனங்களுக்கும் வாராந்திர ஒதுக்கீடு உத்தரவாதம்

♦நாடு முழுவதும் உள்ள அனைத்து CPC மற்றும் LIOC எரிபொருள் நிலையங்களுக்கும் பொருந்தும்

♦பொது போக்குவரத்து சேவை வாகனங்களிற்கு எரிபொருளின் கட்டுப்பாடு இல்லை .(பஸ்கள் / ரயில்கள்). இதனால் இந்த திட்டம் அவற்றிற்கு பொருந்தாது.

♦அடுத்த சில நாட்களுக்கு பதிவு திறந்திருக்கும். தேசிய அடையாள அட்டை/பாஸ்போர்ட் எண். / வணிக பதிவு எண், வாகன எண் & இயந்திர எண் கட்டாயம்

♦எரிபொருள் ஒதுக்கீடு தயாரானதும் பயனர்களுக்குத் தெரிவிக்கப்படும்

♦1 தேசிய அடையாள அட்டை/ பாஸ்போர்ட்/ BRN – 1 வாகனம் மட்டும்

♦எரிபொருள் ஒதுக்கீடு கிடைத்ததும், எரிபொருள் பம்பில் QR குறியீடு தயாரிக்கப்படும். படம் அல்லது அச்சிடப்பட்ட கடின நகல்.

♦பயன்படுத்தப்பட்ட / கிடைக்கும் எரிபொருள் ஒதுக்கீடு மற்றும் காலாவதி திகதி ஆகியவற்றை கணினி காண்பிக்கும்

♦எரிபொருள் பம்ப் செய்யப்பட்டவுடன் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும்.

♦வார எரிபொருள் ஒதுக்கீட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது

♦வாகன எண்ணின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் பம்ப் செய்ய நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இறுதி வாகன இலக்கங்களின் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் நாட்கள்

0, 1, 2 – திங்கள் மற்றும் வியாழன்

3, 4, 5 – செவ்வாய் மற்றும் வெள்ளி

6, 7, 8, 9 – புதன், சனி & ஞாயிறு

♦ எரிபொருள் பாஸ் சிஸ்டம் செயல்பட்டவுடன் மட்டுமே பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தைத் தொடங்கும்.

♦எரிபொருள் கூட்டுத்தாபன எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்க வேண்டாம்

♦எரிபொருள் பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்படும் வரை LIOC தற்போதைய முறை தொடரும்

spot_imgspot_img

More like this
Related

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்