சிங்கப்பூரில் தரையிறங்கியது கோட்டா பயணித்த விமானம்!

Date:

தப்பியோடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயணித்த SV-788 விமானம் சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

கோட்டாபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியா செல்ல உள்ளார்.

அசோசியேட்டட் பிரஸ், பெயரிடப்படாத மாலைதீவு அதிகாரிகளை மேற்கோள் காட்டி, ராஜபக்ஷ சவூதிக்கு செல்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது.

கோட்டாபய தனது ராஜினாமாவை நாடாளுமன்ற சபாநாயகரிடம் நேற்றைய தினத்திற்குள் அனுப்பி வைக்கப்படும் என்று உறுதியளித்த போதும், இன்னும் ராஜினாமாவை சமர்ப்பிக்கவில்லை.

சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஜனாதிபதி ராஜபக்ச சிங்கப்பூர் சென்றடைந்ததாக ஏபி தெரிவித்துள்ளது.

மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று உலகில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக மாறியது.

Flightradar24.com இன் தரவுகளின்படி, மாலேயில் இருந்து சவுதியா விமானம் 788 ஆனது GMT காலை 7:43 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 5,000 பயனர்களால் கண்காணிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்