கிளிநொச்சி வாசியிடமிருந்து மீட்கப்பட்ட டீசல் அத்தியாவசிய தேவைகளிற்காக வழங்கப்பட்டது!

Date:

நபர் ஒருவரிடமிருந்து மீட்கப்பட்ட 6800 லீட்டர் டீசல் அத்தியாவசிய சேவைகளிற்காக மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி நீதிமன்றினால் குறித்த எரிபொருள் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி கரடிபோக்கு பகுதியில் கடந்த வாரம் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட டீசல், பெற்றோல் மற்றம் மண்ணெண்ணையே இவ்வாறு நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டு அத்தியாவசிய சேவைகளிற்காக பயன்படுத்த கையளிக்கப்பட்டது.

அதற்கு அமைவாக இன்றைய தினம் 12.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகன் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்ற பதிவாளரை சந்தித்து குறித்த எரிபொருட்களை பெற்றுக்கொண்டனர்.

குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிடுகையில்,
எமக்கு கிடைக்கப்பெற்ற எரிபொருளில் 6800 லீட்டர் டீசலாக காணப்படுகின்றது.

அதனை நீதிமன்றம் மாவட்ட செயலகத்திற்கு கையளித்துள்ளது. அதன் பிரகாரம் குறித்த எரிபொருளை கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கையளித்து அவற்றை அத்தியாவசிய சேவைகளிற்காக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தி மீதான இறுக்கமான பிடியை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் ஈரான்

ஈரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்துப் பேசாமல், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள...

தற்குறி போல நடந்த அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால்...

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்