காட்டு யானையுடன் கார் மோதி விபத்திற்குள்ளானதில் படுகாயமடைந்த பழம்பெரும் நடிகர் ஜாக்சன் அந்தோனி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார், ஆனால் சுயநினைவுடன் இருக்கிறார் என்று மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
காயமடைந்த மற்றைய இருவரும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மற்றையவர் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று இரவு 10 மணியளவில் அனுராதபுரம் – தலாவ வீதியில் பயணித்த வாகனம் மொரகொட பிரதேசத்தில் காட்டு யானையுடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த மூவரும் நேற்று மாலை அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தின் தாக்கத்தில் வாகனத்தின் மீது காட்டு யானை விழுந்து வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதி மக்களும் தலாவ பொலிஸாரும் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.