பாடசாலை செல்ல லொறியில் ஏறிய மாணவர்கள்: அதிகமானவர்கள் ஏறியதால் லொறி உடைந்து விழுந்து 13 பேர் காயம்!

Date:

எரிபொருள் நெருக்கடி காரணமாக, போக்குவரத்து வசதியின்றி லொறியில் பயணித்த மாணவர்கள், லொறியின் தரைப்பகுதி இடிந்து விழுந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறிய லொறியில் கலென்பிடுன்வெவ தக்ஷிலா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணித்துள்ளனர்.

கலன்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று சிறுவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கெக்கிராவவிலிருந்து தச்சிஹல்மில்லாவ செல்லும் வீதியில், எல்லவெவ சந்தியில், பாடசாலை செல்ல மாணவர்கள் காத்திருந்தனர். எரிபொருள் நெருக்கடியால் பேருந்து சேவை இடம்பெறவில்லை.

நல்லெண்ண அடிப்படையில் மாணவர்களை தனது வானத்தில் ஏற்றிக் கொண்டு சாரதி பயணப்பட்டுள்ளார். சுமார் 30 மாணவர்கள் அந்த வாகனத்தில் ஏறியுள்ளனர்.

சிறிய லொறியின் பாரம் அதிகரித்ததால், தரைப்பகுதி இடிந்து இடிந்து விழுந்துள்ளது.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பதின்மூன்று மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அடிப்படை சிகிச்சை பெற்று வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று மாணவர்களில் ஒரு மாணவனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்