ஜூலை 10ஆம் திகதி வரை 10 சதவீத தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என தனியார் பேருந்து நடத்துநர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பஸ்களை இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.




