பொலன்னறுவ, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 தொடக்கம் 600 வரையான கைதிகள் இன்று (29) காலை தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவை தெரிவித்துள்ளார்.
இன்று காலை இரண்டு குழுக்களிற்கிடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு செல்வது கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் துங்காவில பாலத்திற்கு அருகில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,
அப்பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
1
+1
1