வவுனியா, நெடுங்கேணியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் போலி விசா மற்றும் கடவுச்சீட்டுடன் நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கத்தார், டோஹா ஊடாக ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல முற்பட்ட வேளையில் விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1