தம்புள்ள மேயரின் வாகனம் புரட்டி வைக்கப்பட்டது!

Date:

கொழும்பில் மஹிந்த ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்ட வன்முறையின் பின்னர் தெற்கின் பல பகுதிகளிலும் பொதுஜன பெரமுன பிரமுகர்களின் வீடுகள், வாகனங்கள் தீ வைக்கப்பட்டு வருகிறது.

கொழும்பில் மஹிந்த ராஜபக்ச ஆதரவு பேரணியில் கலந்து கொண்டு விட்டு திரும்பிக்கொண்டிருந்த தம்புள்ள நகரசபை தலைவரின் வாகனம், மீரிகம அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து தாக்கப்பட்டுள்ளது.

வாகனத்திற்குள்ளிருந்து 17 போத்தல் அரக் சாராயம் மற்றும் உணவுப் பொருட்கள் மற்றும் கூரிய கத்தி ஆகியன மீட்கப்பட்டன.

நகரசபை தலைவரின் உத்தியோகபூர்வ வாகனத்தின் கடமை நேர பயண பதிவு புத்தகமும் அங்கு காணப்பட்டது.

வாகனத்தில் ஏழு பேர் இருந்ததாகவும், காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. வாகனத்தில் இருந்த சிலர் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களில் நகரசபை மேயர் இருந்தாரா என்பது  தெரியவில்லை.

spot_imgspot_img

More like this
Related

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் — பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில்

ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு, சமகால...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்