இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து சர்வதேச கடற்பரப்பில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 240 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 7 வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.
தெற்கு கடற்கரையிலிருந்து 630 கடல் மைல்கள் தொலைவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 480 மில்லியன் ரூபா எனவும், கைது செய்யப்பட்ட கப்பல், போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர்கள் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.




