25.3 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

சாராவை தேடி 3வது டிஎன்ஏ சோதனை: சாய்ந்தமருதில் கொல்லப்பட்டவர்கள் சடலங்கள் நாளை மீள அகழ்வு!

உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை தொடர்ந்து அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் டிஎன்ஏ பரிசோதனைக்காக நாளை (27) அம்பாறை பொது மயானத்தில் தோண்டி எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியின் மனைவி புலஸ்தினி மகேந்திரன் (சாரா ஜெசிமின்)  என்பவர் தொடர்பான டிஎன்ஏ பரிசோதனைக்காக, சடலங்கள் தோண்டி எடுக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஈஸ்டர் தொடர் தாக்குதல்களின் பிரதான சந்தேகநபரான சஹரான் ஹசீமின் சகோதரரால் 19.04.2019 இரவு சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தொடர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் சாரா ஜஸ்மின் இறந்ததாக இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சாரா தொடர்பான மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், அவர் தொடர்பான  விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

சாராவை அடையாளம் காண, உடல் உறுப்புகள் டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

அம்பாறை நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் சடலத்தின் மூன்றாவது பிரேத பரிசோதனையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொள்ள உள்ளனர்.

அம்பாறை நீதவான் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்படவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கேரள கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

சட்டவிரோதமாக வாகனத்தை பதிவு செய்த தொழிலதிபர் ஒருவர் கைது

east tamil

நாமல் ராஜபக்ஷவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

east tamil

35000 பட்டதாரிகளுக்கு உடனடி வேலைவாய்ப்பு

east tamil

விட்டமின் மருந்துகளால் ஒவ்வாமை : 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

Leave a Comment