பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் லு பென்னை தோற்கடித்து மீண்டும் ஜனாதிபதியான மக்ரோன்!

Date:

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது தீவிர வலதுசாரிப் போட்டியாளரான மரைன் லு பென்னை தோற்கடித்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்று கருத்துக்கணிப்பாளர்களின் ஆரம்ப கணிப்புகள் காட்டுகின்றன.

முதல் கணிப்புகள் ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாம் கட்ட வாக்களிப்பில் மக்ரோன் 57.65 சதவீத வாக்குகளைப் பெற்றதாக கணிப்புக்கள் தெரிவித்தன.

மக்ரோன் 2017 தேர்தலில் பெற்ற 66.10 வீத வாக்குகளை விட குறைவான வாக்குகளையே வென்றிருக்கிறார். பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி ஒருவர் இரண்டாவது தடவையாகவும் வெற்றி பெறுவது கடந்த இருபது ஆண்டுகளின் பின்னர் இது முதல் முறை ஆகும். தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்ற மூன்றாவது பிரான்ஸ் ஜனாதிபதியாக மைக்ரோன் மாறியுள்ளார். இல் ஜாக் சிராக் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்றிருந்தார். 

 தீவிர வலதுசாரி தேசிய பேரணி கட்சியின் (Rassemblement National அல்லது RN) வேட்பாளரான லு பென் 41.8 சதவீத வாக்குகளைப் பெற்றார். கடந்த மூன்று தேர்தல்களில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார். இம்முறையே அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

மக்ரோன் ஞாயிற்றுக்கிழமை மாலை ஈபிள் கோபுரம் அமைந்துள்ள Champ-de-Mars ஆற்றிய வெற்றி உரையில், தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

“நான் இனி ஒரு முகாமின் வேட்பாளர் அல்ல, ஆனால் நம் அனைவருக்கும் தலைவர்,” என்று அவர் கூறினார்.

விடுமுறை காரணமாக, இறுதிச் சுற்று தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைவாக இருக்குமென எதிர்பார்த்ததை போலவே முடிவுகள் அமைந்துள்ளன. இறுதிச் சுற்றில் வாக்களிக்காதோர் எண்ணிக்கை 28.2 வீதமாக அதிகரித்துள்ளது. பிரெஞ்சு தேர்தல் வரலாற்றில் 1969 ஆம்ஆண்டுக்குப் பின் இது மிக உச்ச எண்ணிக்கை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலின் இறுதிச் சுற்று முடிவுகள் ஏப்ரல் 27ஆம் திகதி வெளியாகும்.

spot_imgspot_img

More like this
Related

‘அல்வா’ கொடுத்த செல்வம்; மீண்டும் தலைவரானார்: அதிருப்திக்குழு நீதிமன்றத்தை நாடுகிறது!

பெண்ணொருவருடன் சர்ச்சைக்குரிய உறவு தொடர்பான தொலைபேசி உரையாடல் கசிந்ததை தொடர்ந்து தமிழீழ...

உலகளவில் El Niño உருவாகும் சாத்தியம் – பிப்ரவரிக்குப் பிறகு கனமழை எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை உயர்வால் ஏற்படும் El Niño காலநிலை நிகழ்வு,...

காலிமுகத்திடலில் கின்னஸ் சாதனை: 5,000க்கும் மேற்பட்டோர் இணைந்து பரதநாட்டியம்!

கொழும்பில் 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் இணைந்து கின்னஸ் உலக சாதனை! கொழும்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்