25.8 C
Jaffna
February 4, 2025
Pagetamil
இலங்கை

காலி முகத்திடல் போராட்டம் நடுநிலையானதெனில் நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்!

காலி முகத்திடல் மக்கள் போராட்டம் நடுநிலையானதாக இருந்தால் நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, தற்போது சில அரசியல் கட்சிகள் போராட்டத்தை தமது சொந்தமாக்க முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் நாட்டின் நலனுக்காக சாதகமான ஒன்றைக் கோருவதாகவும், அவர்கள் அரசியலால் பிளவுபடவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் பொதுமக்களை ஏமாற்றி பொய் சொல்லும் சம்பவங்கள் ஏராளமாக உள்ளது என்றார்.

எவ்வாறாயினும், இவ்வாறான நபர்கள் ஜனாதிபதியாகவும் அரசாங்கங்களாகவும் பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் எனவும், எனினும் இன்று பொதுமக்கள் மாற்றத்தை கோருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இன்று பொதுமக்கள் நடுநிலைக் கண்ணோட்டத்தில் நாட்டிற்கு எது நல்லது என்று கோருவதாகவும், நீதியை நிலைநாட்ட மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் திஸாநாயக்க கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தியாகி நடராஜன் நினைவு தினம் இன்று

east tamil

77வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து

east tamil

மாணவர்களுக்கு காலணி வவுச்சர்கள் விநியோகம் – கல்வி அமைச்சின் அறிவிப்பு

east tamil

நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒத்துழைக்க அழைப்பு

east tamil

பலப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு தத்தெடுப்புக்கான சட்ட நடைமுறைகள்

east tamil

Leave a Comment