முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஏற்பாட்டில் எதிர்க்கட்சிகள் சந்திப்பு!

Date:

தற்போதைய அரசியல் நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து ஆலோசிப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களிற்கிடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, பாட்டலி சம்பிக்க ரணவக்க, அனுர பிரியதர்சன யாப்பா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிவதற்கு முன்னதாகவே சஜித் பிரேமதாச அங்கிருந்து சென்று விட்டார்.

அரசாங்கத்திற்கு எதிரான கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதால் இந்த நேரத்தில் செய்ய வேண்டிய முன்னுரிமைகளை அடையாளம் காண ஒரு குழுவை நியமிக்க வேண்டியதன் அவசியம் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

எந்தவொரு இடைக்கால ஏற்பாட்டையும் பரிசீலிப்பதற்கான முதல் படியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கத்தில் இருந்து பிரிந்து சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த தரப்புக்கள் ஜனாதிபதியை நீக்குவதற்கு ஆதரவாக இல்லை. அத்துடன், அமைச்சரவை கலைக்கப்பட்டாலோ அல்லது ஜனாதிபதி பதவி விலகுவதாலோ அடுத்த தலைமைத்துவம் தொடர்பில் அவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை.

எனவே, நேற்றைய கூட்டத்தில், என்ன செய்ய வேண்டும் என்பதை அடையாளம் காண ஒரு குழுவை அமைக்க கட்சிகள் முடிவு செய்தன.

இடைக்கால நிர்வாகத்திற்குப் பிறகும் எடுக்க வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் குறித்து பொது ஒருமித்த கருத்து இருக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர்.

spot_imgspot_img

More like this
Related

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்