கடைசியில் ஆணுறைக்குள் தஞ்சமடைந்த அரச ஆதரவாளர்கள்!

Date:

காலி முகத்திடலில் புதிதாக உருவாகியுள்ள எழுச்சிக் கிரமமான ‘கோட்டாகோகம’ பகுதியில் தங்கியுள்ள இளையவர்கள் பற்றி இணையத்தில் போலி அவதூறு செய்திகளை வெளியிடுபவர்கள் பற்றி அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரச ஆதரவாளர்கள் இந்த போலிச்செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

கோட்டா கோ கம என பெயரிட்டு, காலி முகத்திடலில் இளையவர்கள் தங்கியிருக்கிறார்கள்.

அங்கு கூடாரங்களிற்குள் ஆண்களும், பெண்களும் பாலுறவு கொள்கிறார்கள், போராட்டத்திற்கு சென்ற உங்கள் மகள்கள் சமூப்பிறழ்வில் ஈடுபடுகிறார்கள் என பெற்றோர்களை எச்சரிக்கும் பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.

இதன்படி, காலி முகத்திடல் கூடாரங்களுடன், வீதியில் ஆணுறைகள் சிதறிக்கிடக்கும் காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், தும்கூரில் தேசிய நெடுஞ்சாலையின் ஆணுறைகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தி விபத்திற்குள்ளாகி, வீதியில் ஆணுறைகள் சிதறின. 2021 இல், இந்த சம்பவம் நடந்தது.

இந்த புகைப்படத்தை, காலி முகத்திடலில் எடுக்கப்பட்டதாக போலியாக அரச ஆதரவாளர்கள் பரப்பி வருவது அம்பலமாகியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மன்னார் கடலில் சிக்கிய படகில் ஹஷிஷ் போதைப்பொருள்

மன்னார் தெற்கு கடலில் கையப்படுத்தப்பட்ட டிங்கி படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை...

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளம்ஜோடி கைது!

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி...

தம்பதி கொலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!

வெள்ளிக்கிழமை மாலை தலங்கம, அக்குரேகொடவில் வாகனத்திற்குள் ஒரு தம்பதியைக் கொன்ற துப்பாக்கிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்