கோட்டாவின் சோதிடர் ஞானாக்காவின் வீடு முற்றுகை; தாக்குதல்!

Date:

அநுராதபுரம் இசுருபுர பிரதேசத்தில் உள்ள ஞானக்கா என்ற பெண் சோதிடரின் வீட்டை நேற்று (04) இரவு பெரும் எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களின் சோதிடரான ஞானாக்கா என்ற பெண்ணின் வீடும், காளி கோயிலும் அனுராதபுரம் விமான நிலைய வீதியில் உள்ள இசுருபுர பகுதியில் உள்ளது.

இன்று பெருமளவான போராட்டக்காரர்கள் ஞானக்காவின் வீட்டை சுற்றிவளைத்து போராட்டம் நடத்தினர். அத்துடன் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தினார்கள்.

அந்த பகுதியில் கடமையில் இருந்த பொலிசாரால், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இராணுவத்தினர் அழைக்கப்பட்டனர்.

ஞானாக்காவின் வீடு, வழிபாட்டிடத்திற்கு இராணுவமும் பொலிசாரும் பாதுகாப்பு வழங்கினர்.

ஞானாக்காவின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்