பெரும்பான்மையை இழக்கும் அபாயம்: முன்னெச்சரிக்கையாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுகிறது?

Date:

நாடாளுமன்றத்தில் அரச தரப்பு பெரும்பான்மையை இழக்கும் அபாயம் ஏற்படும் சாத்தியமுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாராளுமன்றத்தை ஒத்திவைக்கவோ அல்லது இடைநிறுத்தவோ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச தரப்பை மேற்கோளிட்டு சிங்களஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புத்தாண்டு விடுமுறையை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கலாம் என்று பல உயர் அரசாங்க அதிகாரிகள் ஏற்கனவே சுட்டிக்காட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பாராளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை (113) அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், கடந்த வாரம் கொழும்பில் மூன்று இடங்களில் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அரசாங்க புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சிகளின் பிரதான அரசியல் குழுக்களுடன் விமல்- கம்மன்பில அணி ஏற்கனவே கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

சபாநாயகரிடம் எழுத்து மூலம் பெரும்பான்மையை காட்டி, அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு விமல்- கம்மன்பில அணி எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விமல்- கம்மன்பில அணியின் கலந்துரையாடல்களை ஆராய்வதற்காக பல புலனாய்வுக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த அதிகாரிகள் இரவு பகலாக அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரச புலனாய்வு சேவை மற்றும் மேல் மாகாணம் (உளவுத்துறை) ஆகிய புலனாய்வு குழுக்கள் இது தொடர்பில் செயற்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்