மொரட்டுவ மாநகர சபையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டம் இடம்பெற்று வருகிறது.
மரத் தொழிலில் ஈடுபடுபவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வில்லோரவத்தை மரக் கூட்டுத்தாபனத்தில் இருந்து மொரட்டுவை மாநகர சபைக்கு பேரணியாக சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினர் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய மொரட்டுவ மாநகர சபைக் கூட்டத்தை இடைநிறுத்துவதற்கு மேயர் தீர்மானித்துள்ளார்.
இதேவேளை, மொரட்டுவை மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜே.வி.பி உறுப்பினர்களும் சபைக்கு வெளியே வந்து அடிக்கடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





