யாழ்ப்பாணம், வட்டுகோட்டை பொலிஸ் பிரிவில் நள்ளிரவில் வீடு புகுந்த திருடர்கள் முதிய தம்பதியிடம் வாள் முனையில் கொள்ளையடித்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் நடந்தது.
மாவடி வீதியில் வசித்து வந்த வயோதிப தம்பதியின் வீட்டு ஓடு பிரித்து உள்நுழைந்த திருடர்கள், வாள் முனையில் அவர்களை மிரட்டி, இரண்டு பவுண் சங்கில் மற்றும் 25 ஆயிரம் பணம் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




