உள்ளுராட்சி சபைகளை இணையவழியில் மேம்படுத்தல் (CDLG) திட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் UNDP நிறுவனத்தினரால் இன்று(18) பி.ப 2.00மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் வைத்து காணொளி கலந்துரையாடலுக்கான தொடர்பாடல் இலத்திரனியல் சாதனங்கள் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதனூடாக கொவிட் 19 இடர்கால சூழலில் கலந்துரையாடலகள் முதலான தொடர்பாடல் செயன்முறைகள் மற்றும் அரச சேவைகளை தடைகளின்றி வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்வதற்காகவே குறித்த இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன், மாவட்ட செயலக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் யோ.மதுசூதன் மற்றும் UNDP நிறுவனத்தின் கள உத்தியோகத்தர்களான த.சதீசன், ந.வைதேகி, ரொ.பிரபாலினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
-சண்முகம் தவசீலன்-