இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையடுத்து தமிழகம், கேரளாவிலுள்ள கரையோர பகுதிகளில் பொலிசார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவிற்கு அகதிகள் படையெடுக்கலாமென்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யுத்த காலத்தை போன்று, தற்போதைய காலத்திலும் பெருமளவான அகதிகள் தமிழகத்தை நோக்கி வரலாமென இந்தியா கருதுவதாக அறிய முடிகிறது.
இதனால் இலங்கை ‘பொருளாதார அகதிகள்’ பற்றிய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய ‘பொருளாதார அகதிகளை’ கையாள தமிழக காவல்த்துறை விசேட பொறிமுறையொன்றை உருவாக்கியதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அவர்கள் என்னவிதத்தில் கையாளப்படுவார்கள் என்பது உடனடியாக தெரியவில்லை.




