சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே இலங்கை இவ்வளவு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஐ.தே.க அரசாங்கங்கள் இதேபோன்ற பொருளாதார நெருக்கடியின் போது நாட்டைக் கைப்பற்றி பொருளாதாரத்தை மீட்டெடுத்த பல சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும் விக்கிரமசிங்க கூறினார்.
காலதாமதம் செய்வதோ அல்லது சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதையோ தவிர வேறு தீர்வு இல்லை என தாம் தொடர்ச்சியாக தெரிவித்து வருவதாக சமூக ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.




