27.6 C
Jaffna
March 28, 2024
இலங்கை

பசில் ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு!

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கட்சிக்குள் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி மற்றும் அதன் நிர்வாகம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமை, நாட்டின் பொருளாதார நிலை குறித்து பாராளுமன்றத்திற்கு தெரிவிக்காமை மற்றும் பதிலளிக்காமை போன்ற காரணங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் கட்சி முகாமைத்துவக் குழுவும் கலந்துரையாடி உடனடி நடவடிக்கை எடுப்பதாக அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment