பசில் ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு!

Date:

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கட்சிக்குள் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி மற்றும் அதன் நிர்வாகம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமை, நாட்டின் பொருளாதார நிலை குறித்து பாராளுமன்றத்திற்கு தெரிவிக்காமை மற்றும் பதிலளிக்காமை போன்ற காரணங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் கட்சி முகாமைத்துவக் குழுவும் கலந்துரையாடி உடனடி நடவடிக்கை எடுப்பதாக அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்