தமிழ் தேசிய கூட்டமைப்பில் கிறிஸ்தவ மேலாதிக்கம்; கோட்டாவை சந்திக்கும் குழுவிலும் ஆதிக்கம்: மறவன்புலவு சச்சி ‘புதுக்குண்டு’!

Date:

சிவசேனை அமைப்பின் தலைவர்மறவன்புலவு க.சச்சிதானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு-

குடியரசுத் தலைவர் கோத்தபயா அழைத்திருக்கிறார். தமிழரின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பேச வாருங்கள் என அழைத்திருக்கிறார்.

தமிழர் தேசியக் கூட்டமைப்பை அழைத்திருக்கிறார். இந்திய பிரதமர் வரு முன்பு அழைத்திருக்கிறார்.

இலங்கைத் தமிழர் தேசியப் பரப்பில் 87% சைவர். 12% கிறித்தவர். ஏனையோர் 1%.

மலையகம், கிழக்கு, வடமேற்கு, வடக்கு எனத் தமிழ்த் தேசிய பரப்பின் வாழ்விடங்கள். மரபுவழி வாழ்விடங்கள்.

கிழக்கின் சம்பந்தன் தலைமையில், வடக்கின் சேனாதிராசா அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுமந்திரன் ஆகியோர் குடியரசுத் தலைவரைச் சந்திப்பர்.

இந்த ஐவர் குழுவில் இருவர் கிறித்தவர். 87% சைவர் சார்பில் குழுவில் 60% சைவரும்
12% கிறித்தவர் சார்பில் குழுவில் 40% கிறித்தவரும் அடங்குவர்.

இச்சந்திப்பில் சைவரான அம்பாறைக் கலையரசன் இல்லை. மலையகச் சைவரான இராதாகிருட்டிணனும் இல்லை.

தமிழர் தேசியப் பரப்பில் விரிந்துள்ள பூதாகரமான பிரச்சினைகளுள் சைவர்களுக்குப் புத்தர்களால் முகமதியர்களால் கிருத்துவர்களால் எழுகின்ற பிரச்சினைகளே பாரிய பிரச்சினைகள்.

திருக்கேதீச்சர வளைவு உடைப்புடன் மன்னாரில் 37 இடங்களில் கத்தோலிக்கரின் இந்து சமய அழிப்பு என்பனவற்றை வெற்றிகரமாக நிகழ்த்தி முடித்த மன்னார் ஆயரின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன் குழுவில் இருக்கிறார்.

மலையகத்தில் இரு தசாப்தங்களின் முன் 100 கிருத்துவர்கள். இன்று 145 கிறிஸ்தவர்கள். வடக்கில் இரு தசாப்தங்களின் முன் 9% கிறித்தவர். இன்று 19% கிறித்தவர். மத மாற்றிகள் அட்டூழியத்தைச் சைவர் தாங்க முடியாமல் தவிக்கின்றனர். மதமாற்றிகள் சார்பில் குழுவில் சுமந்திரன் இருக்கிறார்.

தமிழ்தேசிய பரப்பில் புதிது புதிதாக மசூதிகள் தேவாலயங்கள் விகாரங்கள் அமைந்து வருகின்றன. புத்தர் முகமதியர் கிருத்தவர் இல்லாத இடங்களில் எல்லாம் அமைந்து வருகின்றன.

சைவர்களுக்கு தமிழ்த்தேசிய பரப்பில் நடைபெறும் அட்டூழியங்களை எடுத்துச் சொல்ல முடியாது பெருகி வருகின்றன.

குடியரசுத் தலைவரைக் காணச் செல்லும் ஐவர் குழுவில் உள்ள 60% சைவரையும், தமிழ்த் தேசியப் பரப்பில் சைவர்களுக்கு எதிராக நடைபெறும் அட்டூழியங்களைச் சொல்ல விடாது 40% கிறித்தவர் அடக்கி வைத்திருக்கின்றனர்.

கிறித்தவ மேலாதிக்கத்தின் உடனான அதிகாரப் பரவலாக்கத்தால் சைவர்களுக்குத் தீமையே விளையும்.

சைவர் மீதான கிறித்துவ மேலாதிக்கத்தை உறுதி செய்யத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஐவர் குழுவில் 40% கிறித்தவர் குடியரசுத் தலைவரைச் சந்திக்கச் செல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.

கலையரசனையோ குகதாசனையோ இராதாகிருட்டிணனையோ சேர்த்து நால்வரும் கிறித்தவர் ஒருவரும் ஆன ஐவர் குழுவாகக் குடியரசுத் தலைவரைத் தமிழ்த் தேசியப் பரப்புச் சார்பாகச் சந்திக்கச் செல்வதையே இலங்கைச் சைவர்கள் போற்றுவார்கள்.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸில் அமெரிக்காவின் சுங்கக்கட்டணம் மட்டுமே இருக்கலாம்!

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம்...

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது ஈரான்

தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ்...

போராட்டத்துக்காக 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகள் தியாகம் செய்தது மட்டக்களப்பு

மட்டக்களப்பு தமிழ் தேசிய போரட்டத்துக்காக பல இயக்கங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்