இன்று (14) காலை 8 மணியளவில் உணவகம் ஒன்றின் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் லிந்துலை லாமரியர் தோட்டத்தைச் சேர்ந்த 74 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மருதைவீரன் பெருமாள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் லிந்துலையில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல்காரராக பணிபுரிந்து வந்த நிலையில், அதிகாலை உணவகத்திற்கு வருகை தந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது உணவகத்தில் எவரும் இருக்கவில்லை எனவும், உணவு சமைத்த போது தீயினால் அவர் உயிரிழந்துள்ளதாக உணவகத்தின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.



