1408 ரூபாய் திருடிய போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ, ராவத்தவத்தை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் வைக்கப்பட்டிருந்த நன்கொடைப் பெட்டியிலிருந்து இந்த பணத்தை அவர் திருடியிருந்தார் .
சந்தேக நபர் இராஜதந்திர பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
பணத்தை திருடுவதற்காக நன்கொடைப் பெட்டியை உடைத்த சந்தேகநபரை பல்பொருள் அங்காடி ஊழியர்கள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவர்கள் கல்கிசை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து மொரட்டுவ பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்துள்ளனர்.
நோய்வாய்ப்பட்ட வயோதிபர்களிற்கு நன்கொடையளிக்க பல்பொருள் அங்காடியில் வைக்கப்பட்டிருந்த நன்கொடைப் பெட்டியில் இருந்த பணத்தை சந்தேக நபர் திருடியுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.