அரசாங்கத்தின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் இன்று காலை நடைபெற்றது.
இந்த வார பாராளுமன்ற அமர்வுகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
மின்சார நெருக்கடியைத் தீர்ப்பது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துதல், ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ விளக்கமளித்தார்.




