கனடாவில் கொல்லப்படவுள்ள 12,000 வான் கோழிகள்!

Date:

கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் பறவைகளிற்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது.  மாகாணத்தில் உள்ள பறவைகளுக்கு இடையே தீவிரமாக பரவி வரும் இந்த வைரஸ் தொற்றானது பெரும்பாலான பறவைகளை உயிர் இழக்கச் செய்துள்ளது.

தீவிரமாக பரவி வரும் பறவை காய்ச்சலினால் சுமார் 12000 வான்கோழிகள் கொல்லப்பட உள்ளன.

நோவா ஸ்கோஷியா மாகாணத்தின் மேற்கு பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பறவைக்காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கு கோழி பண்ணையில் இருக்கும் 12000 வான்கோழிகளை கொல்லப்பட உள்ளதாக கனடிய உணவு ஆய்வு ஏஜன்சி தெரிவித்துள்ளது.

Avian influenza என்றழைக்கப்படும் பறவை காய்ச்சல் வேகமாக பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை எது என்ற விவரங்களை வெளியிடவில்லை.

அந்த குறிப்பிட்ட பண்ணையில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதனைச் சுற்றி 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைந்துள்ள மற்ற கோழிப் பண்ணைகளுக்கு நோய் பரவாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கனடிய உணவு ஆய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்