29.5 C
Jaffna
March 28, 2024
உலகம்

கனடாவில் கொல்லப்படவுள்ள 12,000 வான் கோழிகள்!

கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் பறவைகளிற்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது.  மாகாணத்தில் உள்ள பறவைகளுக்கு இடையே தீவிரமாக பரவி வரும் இந்த வைரஸ் தொற்றானது பெரும்பாலான பறவைகளை உயிர் இழக்கச் செய்துள்ளது.

தீவிரமாக பரவி வரும் பறவை காய்ச்சலினால் சுமார் 12000 வான்கோழிகள் கொல்லப்பட உள்ளன.

நோவா ஸ்கோஷியா மாகாணத்தின் மேற்கு பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பறவைக்காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கு கோழி பண்ணையில் இருக்கும் 12000 வான்கோழிகளை கொல்லப்பட உள்ளதாக கனடிய உணவு ஆய்வு ஏஜன்சி தெரிவித்துள்ளது.

Avian influenza என்றழைக்கப்படும் பறவை காய்ச்சல் வேகமாக பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை எது என்ற விவரங்களை வெளியிடவில்லை.

அந்த குறிப்பிட்ட பண்ணையில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதனைச் சுற்றி 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைந்துள்ள மற்ற கோழிப் பண்ணைகளுக்கு நோய் பரவாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கனடிய உணவு ஆய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment