தீவிரமடையும் போராட்டம்: கனடா தலைநகரில் அவசர நிலை பிரகடனம்!

Date:

தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து கனடாவில் டிரக் ஓட்டுநர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், தலைநகர் ஒட்டாவாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து, கனடாவில் அதன் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அந்நாட்டு அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது.

பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. மேலும், டிரக் ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அரசு உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடக்கின்றன.

இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ள டிரக் ஓட்டுநர்கள், தலைநகர் ஒட்டாவாவுக்குள் டிரக்குகளுடன் நுழைந்து போராடப் போவதாக அறிவித்தனர். அதன்படி கனடா தலைநகர் ஒட்டாவாவில் டிரக்குகளுடன் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போர் நினைவிடங்களை ஆக்கிரமித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக, அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனையின் பேரில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் ரகசிய இடத்துக்குச் சென்றார்.

போராட்டக்காரர்கள் தமது வாகனங்களிற்கு எரிபொருள் கொண்டு செல்கிறார்கள். போராட்டக்காரர்களிற்கு எரிபொருள் விநியோகிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.

அங்கிருந்து கொண்டே தனது அரசு வேலைகளை ஜஸ்டின் ட்ரூடோ செய்து வருகிறார். இந்த நிலையில் இரண்டு வார காலமாக நடக்கும் டிரக்குகளுடன் ஓட்டுனர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலையை அறிவித்துள்ளது.

ஒட்டாவா நகரம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் மேயர் ஜிம் வாட்சன் நாட்டின் தலைநகரின் நிலைமையை “எங்கள் நகரம் இதுவரை எதிர்கொண்ட மிக மோசமான அவசரநிலை” என்று விவரித்தார்.

நேற்று பிற்பகல் நகரின் டவுன்டவுன் மையத்தில் எதிர்ப்பாளர்கள் மீது சட்டத்தை கடுமையாக அமுல்ப்படுத்துவதாக ஒட்டாவா பொலிசார் அறிவித்தனர், குற்றப்பத்திரங்களை வழங்கினர் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு எரிபொருள் போன்ற “பொருள் உதவி” கொண்டு வர விரும்பும் எவரும் கைது செய்யப்படலாம் என்று அறிவித்தனர்.

ஒட்டாவா காவல்துறை ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், ஏழு பேர் கைது செய்யப்பட்டதாகவும், 100 க்கும் மேற்பட்ட குற்றப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாகவும் கூறியது. 60 குற்றவியல் விசாரணைகள் நடந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை மாலை, கிழக்கு ஒட்டாவாவில் உள்ள கோவென்ட்ரி சாலையில் உள்ள பேஸ்போல் ஸ்டேடியம் வாகன நிறுத்துமிடத்தில் டஜன் கணக்கான கனரக ஆயுதம் ஏந்திய போலீஸ் அதிகாரிகள் இறங்கினர், அது டவுன்டவுன் மையத்தில் இயங்கும் எதிர்ப்பாளர்களின் தளமாக செயல்பட்டு வருகிறது.

நகரின் மையப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டிரக்குகளிற்கு விநியோகிப்பதற்காக அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருளை பொலிஸார் அகற்றியதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...

தையிட்டி விகாரைக்குள் சிக்கிய காணி மீட்பு விவகாரம்: 21ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்