கடந்த ஞாயிற்றுக்கிழமை கலகெடிஹேனவில் இடம்பெற்ற கம்பஹா மாவட்ட மாநாட்டின் போது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குண்டர் கும்பல் ஒன்று மாநாட்டை தாக்கி கூட்டத்தை நாசப்படுத்த முயன்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு சந்தேக நபர்களும் தற்போது காவலில் இருப்பதாகவும், அவர்கள் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில், அவர்கள் அரசியல் நலன்களுக்காக கூட்டத்தை நாசப்படுத்த முயன்றனர் என்பது தெளிவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின்படி, கைது செய்யப்பட்ட இருவரின் தகவல்களின்படி, பொதுப் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் அமைச்சரவை அமைச்சர் ஒருவரிற்கு தெரிந்து மற்றும் ஆதரவுடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




