மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்ய நடவடிக்கை!

Date:

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கையெடுக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, பல்வேறு சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் நபர்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை மதிப்பிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதிகளவான லொறி மற்றும் பஸ் சாரதிகள் போதையில் வாகனங்களை செலுத்துவது தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி 1,213 நபர்கள் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திற்கு வருகை தந்துள்ளனர்.

குறித்த தினத்தில் பெறப்பட்ட மாதிரிகளில் 145 மாதிரிகளில் பல்வேறு போதைப் பொருட்கள் இருந்ததாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கஞ்சா, ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பாவிக்கும் நபர்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பெற விண்ணப்பித்ததை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர், அதே நேரத்தில் தொடர்ந்து மது அருந்துபவர்களும் விண்ணப்பதாரர்களில் இருந்தனர்.

அந்தத் தரவுகளின் அடிப்படையில், போதையில் வாகனம் செலுத்திய நபர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கண்டறியப்பட்டால், உரிமம் ரத்து செய்யப்படும், ரூ.25,000 அபராதம் மற்றும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

களுத்துறையில் ஒருவர் சுட்டுக்கொலை

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் வெட்டுவக்கடே, முஸ்லிம் மசூதி வீதி பகுதியில்...

குவைத்தில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்

நாட்டின் தெற்குப் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானியப் புரட்சிக்...

சீமானுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் சீர்வரிசையுடன் வந்த அனிதா ராதாகிருஷ்ணன்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு குழந்தை பிறந்​திருக்​கும் நிலை​யில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்