ராகம மருத்துவ பீடத்திற்குள் பலவந்தமாக நுழைந்து அங்கிருந்த மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களில் ஐவரை நாளை (3) வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசர நீதவான் ஹெஷான் டி மேலா இன்று (2) உத்தரவிட்டார்.
விபுல லக்சிறி, மொஹமட் மர்வான் மொஹமட் மொஹிடின், அசேல பூர்ண கொடித்துவக்கு, லக்ஷான் சந்தகெலும் மற்றும் தினேஷ் கெலும் சமரதுங்க ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபர்களில் ஒருவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.




