டொலர் நெருக்கடியும் ஒரு வரப்பிரசாதமே: கிழக்கு ஆளுனர்!

Date:

நாட்டில் தற்போது நிலவும் டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கு ஒரு வரப்பிரசாதமாக பயன்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவசியமற்ற பொருட்களும் நிறுத்தப்படுவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கந்தளாய் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய CO-OP FRESH விற்பனை நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய திருமதி அனுராதா யஹம்பத்,

“நாங்கள் இன்று டொலர் நெருக்கடியைப் பற்றி பேசுகிறோம். 1977ல் இருந்து தினமும் கடன் வாங்கி வருகிறோம். ஒரு நாடாக நாங்கள் அதைத் தொடர்ந்து செய்தோம்.

இப்போது இந்த டொலர் நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்கிறோம்.

தேவையற்ற பொருட்களை நாங்கள் இறக்குமதி செய்ய மாட்டோம், எனவே எங்கள் உள்ளூர் தயாரிப்புகளை மேம்படுத்த வேண்டும். நான் அதை ஒரு வரமாக பார்க்கிறேன்.

கோவிட் தொற்று நோய் தற்போதைய அரசாங்கத்தின் அபிவிருத்தி முயற்சிகளை பாதித்துள்ளது .இது உலகின் அனைத்து நாடுகளையும் பாதித்தது. ஆனால் நம் நாட்டில் மட்டும் பல போராட்டங்கள் நடந்தன. இந்த தொற்றுநோய்க்கு அரசாங்கம் காரணமல்ல மாறாக அரசாங்கத்தையே விமர்சிக்கிறார்கள்.

மேலும், கோவிட் தொற்றுநோயால் நாடு சிதைந்தபோது, ​​​​கூட்டுறவுத்துறை மதிப்புமிக்க சேவையை செய்தது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க மொபைல் வாகனங்களைப் பயன்படுத்தியது.

மேலும் நமது மக்களின் புதிய உள்ளூர் உற்பத்திகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரள, ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, விவசாய அமைச்சின் செயலாளர் கலமதி பத்மராஜா, மாகாண கூட்டுறவு ஆணையாளர் ஏ.எல். எம். அஸ்மி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

-ரவ்பீக் பாயிஸ்-

spot_imgspot_img

More like this
Related

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...

மயிலிட்டி காணி விடுவிப்பு: 14வது வாரமாகவும் தளராத மக்களின் அறவழிப் போராட்டம்

36 ஆண்டுகளாகத் தொடரும் அநீதி - மயிலிட்டி காணி விடுவிப்புக்காக 14...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்