28.8 C
Jaffna
March 2, 2025
Pagetamil
இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் வலையமைப்பின் முக்கிய சூத்திரதாரி சிக்கினார்!

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் வலையமைப்பின் முக்கிய சூத்திரதாரியொருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம், மாதகல் பகுதியை சேர்ந்த, மாதகல் மதன் என அழைக்கப்படும் 44 வயதான அன்ரனி சென்பீட்டர் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வேதாரணியம், செம்போடை பகுதியில் நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தில் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புதுறையினரின் கண்காணிப்பில் இருந்த நிலையில், தமிழகத்தில் கையும் மெய்யுமாக இவர் சிக்கியுள்ளார்.

2021 ஒக்ரோபர் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா கடத்திய விவகாரத்தில், தமிழகத்தில் தேடப்பட்டு வந்தார். தமிழக பொலிசாருக்கு போக்குகாட்டி இரண்டு மாதங்கள் தலைமறைவாக இருந்தவர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

2012ஆம் ஆண்டு தமிழகத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான மதன், ஒன்றரை வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர், 2013ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

விமானம் மூலம் இலங்கை திரும்பியவர், மாதகல் பகுதியிலிருந்து கடற்றொழில் செய்துள்ளார். இந்த காலப்பகுதியில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்புதுறையினரின் கண்காணிப்பில் இருந்து வந்ததாக அறிய முடிகிறது.

இந்த நிலையில், கடல்மார்க்கமாக இந்தியாவிற்குள் நுழைந்த இவர், 2021 ஒக்ரோபர் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா கடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பில் தமிழக ஊடகத் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி,

தமிழகத்தின் பிறிதொரு இடத்தில் கஞ்சாவை பெற்று, கடல்மார்க்கமாக வேதாரணியம் பகுதிக்கு வந்த இலங்கைக்கடத்தல் குழுவினரின் படகில் இருந்து மதன் இறங்கியதுடன், 3 மூட்டை கஞ்சாவையும் இறக்கினார்.

மிகுதி கஞ்சாவுடன் சென்ற ராஜன் (மயிலிட்டி), சாகுல் (மட்டக்களப்பு) ஆகியோர் மயிலிட்டியில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மதன் கொண்டு சென்ற கஞ்சா, 4.11.2011 அன்று புஷ்பவனம் பகுதியில் கைப்பற்றப்பட்டது. எனினும், மதன் தலைமறைவாகி விட்டார்.

அவரை பொலிசார் தேடி வந்த நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளிலுள்ள இலங்கை தமிழ் நண்பர்களின் வீடுகள் மற்றும் கடத்தல் வலையமைப்பினரின் வீடுகளில் தங்கியிருந்த மதன், நேற்று முன்தினம் வேதாரண்யம், செம்போடை கிராமத்திற்கு வந்த போது கைது செய்யப்பட்டார்.

அவர் தற்போது சைதாப்பேட்டை உப சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

டிப்பரில் கஞ்சா கடத்தல்: சுட்டுப்பிடித்தது பொலிஸ்!

Pagetamil

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் இராணுவப் புலனாய்வாளர்கள் இருவர் கைது!

Pagetamil

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

Pagetamil

உடமையில் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் குற்றவாளி என வவுனியா நீதிமன்றில் தீர்ப்பு: மேன்முறையீட்டை அடுத்து பிணையில் விடுதலை!

Pagetamil

வெள்ளை ஈ தாக்கமும் அதன் கட்டுப்பாட்டு பொறிமுறைகளும்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!