வெலிக்கடை சிறைக்கலவரம்: முன்னாள் அத்தியட்சகர் எமில் ரஞ்சனிற்கு மரணதண்டனை!

Date:

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் முன்னாள் சிறைச்சாலை அத்தியட்சகர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வெலிக்கடை கைதிகள் பலரைக் கொன்ற வழக்கில் அவரை குற்றவாளியாக ஒருமனதாக அறிவித்தனர்.

இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகளால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எட்டு கைதிகளின் மரணம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் முன்னாள் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலை அத்தியட்சகர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோருக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் வசமிருந்த சட்டவிரோத மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கைப்பற்றுவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி விசேட நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

இந்த நடவடிக்கையின் போது பல கைதிகள் இறந்தனர், இது பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சட்டமா அதிபர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்