வெலிக்கடை சிறைக்கலவரம்: முன்னாள் அத்தியட்சகர் எமில் ரஞ்சனிற்கு மரணதண்டனை!

Date:

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் முன்னாள் சிறைச்சாலை அத்தியட்சகர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வெலிக்கடை கைதிகள் பலரைக் கொன்ற வழக்கில் அவரை குற்றவாளியாக ஒருமனதாக அறிவித்தனர்.

இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகளால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எட்டு கைதிகளின் மரணம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் முன்னாள் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலை அத்தியட்சகர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோருக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் வசமிருந்த சட்டவிரோத மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கைப்பற்றுவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி விசேட நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

இந்த நடவடிக்கையின் போது பல கைதிகள் இறந்தனர், இது பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சட்டமா அதிபர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்