தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினர் பண்டிதரின் 37 வது ஆண்டு நினைவஞ்சலி இன்றைய தினம் வல்வெட்டித்துறை கம்பர்மலையிலுள்ள அவரது இல்லத்தில் இடம் பெற்றது.
பண்டிதரின் திரு உருவப்படத்திற்க்கு ஈகைச்சுடரினையும் மலர் மாலை பண்டிதரின் தாயார் ஏற்றியதை தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான எம் கே சிவாஜிலிங்கம்,.மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் திரு சதீஸ் ஆகியோர் ஈகை சுடரேற்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
1987 ம் ஆண்டு இதே நாளில் இராணுவத்தின் சுற்றிவளைப்பில் பண்டிதர் உயிர் நீத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



